இன்றைய காலகட்டத்தில் எல்லோர் கையிலும் செல்போன் வந்துவிட்டது. செல்போன் இல்லாமல் அன்றைய பொழுதே ஓடாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். இதில் பெரும்பாலும் சிறுவர்கள் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது வருகிற டிச.4 முதல் 16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய பயனர்களின் FB, இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்படும் எனவும், 16 வயதானால் அவர்கள் மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
