“என் பொண்ணை யாரோ கொன்னுட்டாங்க” வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடந்த பயங்கரம்… மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை.. போலீசாரையே அதிரவைத்த வாக்குமூலம்..!!

By Soundarya on சித்திரை 22, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது மகளின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, முகம் அடையாளம் தெரியாமல் இருக்க ஆசிட் ஊற்றிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  லக்னோ அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் தந்தை ரத்தன் சிங்குக்குத் தெரியவந்தபோது, அவர் தனது மகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால், தந்தை எதிர்த்தும் அந்தச் சிறுமி தனது காதலைக் கைவிடாததால், ஆத்திரமடைந்த தந்தை மகளைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரத்தன் சிங் தனது மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், மகளின் உடல் அடையாளம் காணப்படக் கூடாது என்பதற்காகவும், போலீசாரை திசைதிருப்பவும் சிறுமியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றிச் சிதைத்துள்ளார். அதன் பிறகு, உடலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வயல்வெளியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

   

மறுநாள் காலையில் வயலில் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ரத்தன் சிங்கின் பேச்சில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருந்தன. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, ‘கௌரவக் கொலை’ செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது ரத்தன் சிங்கை கைது செய்துள்ள லக்னோ போலீசார், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.