அட பாவி.. 8 நாள் பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை.. அழுதுகொண்டே இருந்ததால் வன்கொடுமை.. தேனி நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!

By Swetha on வைகாசி 21, 2026

Spread the love

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு தந்தை, தன் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பிறந்து 8 நாட்களேயான தனது சொந்தப் பெண் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அக்கொடூரச் செயலில் ஈடுபட்ட தந்தையைக் கைது செய்தனர்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பான விசாரணை உத்தமபாளையம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தன் பெற்ற மகளையே அடித்துக் கொன்ற தந்தையின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

   

இதனையடுத்து, குற்றவாளியான தந்தைக்குப் பெண் குழந்தையைக் கொன்றதற்காகவும், கொடுமைப்படுத்தியதற்காகவும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.