உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், இரண்டு குழந்தைகளின் விதவை தாய், பேஸ்புக் மூலமாக ஒரு இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில், தனது காதலனை தன்னை சந்திக்க வரச் சொன்னாள். காதலன் தன்னை சந்திக்க வந்தான். அப்போது அந்தப் பெண் இரண்டு குழந்தைகளையும் அறையில் தூங்க வைத்துவிட்டு, அதை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, தன் காதலனுடன் வேறொரு அறைக்குள் சென்றார். அவர்கள் அந்த அறையில் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் மாமனார் ஏதோ சத்தம் கேட்டு சந்தேகப்பட்டார். தனது மருமகள் தனது காதலனுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்டு அவர் அலறியுள்ளார்.
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்து பலர் வந்தனர். அவர்கள் பெண்ணின் காதலனை சரமாரியாக அடித்தனர் . பின்னர் அவர் போனை ஆய்வு செய்ததில் அந்த பெண்ணின் ஆபாச வீடியோக்களும் காணப்பட்டன. இருப்பினும், அந்தப் பெண் தான் அவரை காதலிக்க வில்லை என்று அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறைக்கு அனுப்பினர்.
