ராஜஸ்தான் மாவட்டம் ஜெய்ப்பூர் அடுத்துள்ள மவுக்கம்புரா பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சோனி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவா உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். பிறகு சோனி இரண்டு குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது சிவாவின் உறவினரான 40 வயதுடைய கைலாஷ் என்பவர் அடிக்கடி சோனியின் வீட்டுக்கு வந்து சென்ற நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
இதனை உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்ட சோனியின் மாமனார் மற்றும் அவருடைய கணவரின் அண்ணன் சோனியை கவனிக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து சோனி இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு வெளியே சென்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் கைலாசை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை தொடர்ந்து கவனித்து வந்த மாமனார் மற்றும் கணவரின் அண்ணன் கணேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து இரவு சோனியை பின்தொடர்ந்து சென்று சோனி மற்றும் அவரது காதலனை பெற்றோர் ஊற்றிய எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கைலாஷ் உயிரிழந்த நிலையில் அதனை தொடர்ந்து சோனியும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…