ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், 52 வயது மாமனார் தனது 29 வயது மருமகளை ஆர்ய சமாஜ கோவிலில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாதி லால் என்பவர் தனது மகனுக்கு லலிதேவி என்ற பெண்ணை மிக விமர்சையாக திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மருமகள் மீது மாமனாருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனது காதலை பிரபாதி லால் மருமகளிடம் வெளிப்படுத்திய நிலையில், மாமனாரின் சொத்துக்களின் மீது ஆசைப்பட்ட லலிதேவி அதற்குச் சம்மதித்துள்ளார். ஒரு கட்டத்தில் சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்த இவர்கள் இருவரும் தனிமையில் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளனர். பின்னர், லலிதேவி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, முறைப்படி தனது மாமனாரையே திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தனது தந்தையே தனது மனைவியைத் திருமணம் செய்துகொண்ட இந்த விபரீதச் செயலால், பிரபாதி லாலின் மகன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அவருக்குத் தற்போது டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தை மற்றும் மனைவியின் இந்தத் துரோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு எதிராக இணையத்தில் பரப்பப்படும் அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில்…
சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பல நிதி நெருக்கடிகள் மற்றும் ரிலீஸ்…
சென்னை அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கயிற்றால் கட்டி, கொடூரமாக அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்துவிட்டு…
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கும்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலைப் பிரித்த தந்தைக்குப் பாடம் புகட்ட, ஒரு இளம்பெண் தனது காதலனை வைத்தே சொந்த…
அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எழுதிய அதிரடி கடிதத்துடன்…