மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், லட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே வீட்டில் லட்சுமியின் மாமனார் நத்துலால் பாலி (72) என்பவரும் தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நலக்குறைவால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்த நத்துலால், தனது உடல்நலக் குறைவிற்கும் மகனின் இறப்பிற்கும் மருமகள் லட்சுமி செய்த சூனியமே காரணம் எனக் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், லட்சுமி வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த நத்துலால் அருகிலிருந்த கோடரியால் லட்சுமியின் தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு நத்துலால் வீட்டின் பின்புறமிருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இக்கொலை வழக்கு குறித்து யசோதரா நகர் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…
டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…
ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…
புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…
குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…