“டேய் வேணாம்டா என் மருமகள விட்டுரு”… கள்ளக்காதல் உறவை கண்டித்த மாமனார்… அடுத்து நடந்த பதற வைக்கும் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் சோழர் நாடு ஊராட்சி பகுதியில் விவசாயி செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் காசி துரைசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை செய்யப்பட்ட செல்வராஜ் (55) பள்ளிக்குழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர். விவசாயியான இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ள நிலையில் இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் வீட்டுக்கு அடிக்கடி உறவுக்காரர் காசி துரைராஜ் வந்துள்ளார்.

அப்போது அவருக்கும் விஜயகுமாரின் மனைவி சந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. இதனை அறிந்த விஜயகுமார் மன வருத்தப்பட்டு தந்தை செல்வராஜிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்த செல்வராஜ், காசி துரைசாமியை கண்டித்துள்ளார். தனது மருமகளுடன் உறவை நிறுத்தி விட வேண்டும் என்று பலமுறை கூறியும் காசி துரைசாமி அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வரராஜ் பள்ளி குழிப்பட்டி அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

   

அப்போது மது அருந்திவிட்டு அந்தப் பக்கம் வந்த துரைசாமியை அழைத்து மருமகளுடன் வைத்துள்ள உறவை கைவிட வேண்டும் என்று திரும்பவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அடிதடியாக மாறிய நிலையில் செல்வராஜை பாத்திரத்தில் அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்து காசி துரைசாமி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காசி துரைசாமியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.