விழுப்புரம் அருகே மதுபோதையில் தந்தை தாக்கியதில் பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபு, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது 17 வயது மகள் வைஷ்ணவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். சமையல் இன்னும் முடியவில்லை என்று மகள் கூறியதால் ஆத்திரமடைந்த பாபு, பெற்ற மகள் என்றும் பாராமல் அவரைச் சுவரில் முட்டியும், காலால் எட்டி உதைத்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த வைஷ்ணவி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சுமார் 26 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவி வைஷ்ணவி, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பசிக்கு உணவு சமைக்கவில்லை என்ற சாதாரண காரணத்திற்காகப் பெற்ற மகளையே தந்தை அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவளிப்பது குறித்து எடப்பாடி…
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…