கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை காதலனுடன் ஓடி சென்றதால் ஆத்திரமடைந்த கணவன் ஐந்து வயது மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோப்பூர் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவருக்கு அபினவ் என்ற 5 வயது மகன் உள்ளார். இந்நிலையில் செல்வி அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் ஆன செல்வ மதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. செல்வமதனை திருமணம் செய்த பிறகு செல்விக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு செல்வி ஓடியுள்ளார். இதனால் தன் மனைவியின் மகன் அபிநவ் மற்றும் தன்னுடைய மகனை செல்வ மதன் பராமரித்து வந்த நிலையில் மனைவி ஓடி சென்ற ஆத்திரத்தில் தன்னுடைய மனைவியின் மகனான அபினவ்வை அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் மது போதையில் இருந்து அவர் மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சிறுவனை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு வீட்டை விட்டு ஓடி தலை மறைவான அவர் ஒரு கட்டத்தில் வழக்கறிஞரை சந்தித்து கொலை குறித்து பேசி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து கிடந்த சிறுவனின் அழுகிய சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமுறை வாக இருந்த செல்வ மதனை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…