சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி மிட்டாய் கடுப்பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் 32 வயதுடைய தனது மூத்த மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார். கடந்த 7ஆம் தேதி மர்மமான முறையில் செல்லப்பன் மாட்டு கொட்டகையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று செல்லப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் கந்தம்பட்டி திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த செல்லப்பன் பக்கத்து வீட்டு பெண்ணிடம் சென்று உனக்கும் பிரபுவுக்கும் இருக்கும் உறவு குறித்து வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் நீ என்னுடன் தனிமையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டி உள்ளார். இதனை அறிந்த பிரபு தனது நண்பர்கள் உதவியுடன் செல்லப்பனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனால் பிரபு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
