சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருந்து நேற்று 88K மாநகர பேருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கெருகம்பாக்கம் அருகே சென்ற போது அதில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்து மேற்கூரை மீது ஏறி கூச்சலிட்டபடியும் பயணம் செய்தனர்.
இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த பா.ஜ.க பெண் நிர்வாகி தனது செல்போனில் வீடியோ எடுத்தவாறு இருந்தார். பேருந்து நின்றவுடன் அவர் கீழே இறங்கி பேருந்தின் முன் மற்றும் பின் பக்க படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பள்ளி கல்லூரி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும், கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார்.
மேலும் அவர் ஓட்டுனர் மற்றும் நடத்துநரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக பா.ஜ.க பிரமுகர் மற்றும் சினிமா துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் மீது போலீசார் நாச்சியார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் ரஞ்சனா நாச்சியாரை கைது செய்தனர்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…