“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

By Muthu Mani on வைகாசி 1, 2026

Spread the love

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் 30-ம் தேதி இரவு மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பயணிக்க கார் முன்பதிவு செய்துள்ளார். நீண்ட நேரம் தாமதமாக வந்த ஓட்டுநர் சுஷில் மிஸ்ரா, காரில் நான்கு பயணிகள் இருப்பதைக் கண்டதும், ஒருவருக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும் என்று கூறி அதிர வைத்துள்ளார்.

சாதாரண கார்களில் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் வரை பயணிக்க அனுமதி உள்ள நிலையில், ஓட்டுநரின் இந்த விசித்திரமான விதிமுறை வாடிக்கையாளர்களை ஆத்திரமடையச் செய்தது. தள்ளுபடி விலையில் சவாரி முன்பதிவு செய்யப்பட்டதால் ஓட்டுநர் வேண்டுமென்றே இவ்வாறு நடந்துகொள்வதாகப் பயணிகள் குற்றம் சாட்டினர். இது குறித்து வாடிக்கையாளர் கேள்வி கேட்டபோது, “வேண்டுமானால் புகார் அளித்துக் கொள்ளுங்கள்” என்று ஓட்டுநர் அலட்சியமாகப் பதிலளித்ததோடு, மிகவும் முன்கோபமாகவும் தொழில்முறையற்ற விதத்திலும் நடந்துகொண்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

   

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் வாகனம் மீது ராபிடோ நிறுவனம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். போக்குவரத்து விதிகளின்படி நான்கு பயணிகள் செல்வதில் தடையற்ற சூழலில், கூடுதல் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் இது போன்ற ஓட்டுநர்களால் நிறுவனத்தின் பெயர் கெடுவதாகவும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமை பாதிக்கப்படுவதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by Twitterpated (@riaaastfu)