தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோரது வரிசையில் நடிகர் சத்யராஜ் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். வில்லனாக படத்தில் அறிமுகமாகி நாளடைவில் ஹீரோவாக ஆனவர். இப்போதும் தந்தை, பிரின்ஸிபஸ், போலீஸ் அதிகாரி என குணசித்திர வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் சத்யராஜ் நடிக்கிறார் குறிப்பாக வெப் சீரிஸ்களிலும் சத்யராஜூக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடித்து சகல தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தவராகி விட்டார்.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. பிரபல வார இதழ் ஒன்றில் ஒரு நடிகையின் கதை என்ற தொடர் வெளியானது. அதாவது ஒரு நடிகை, தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவருக்கு நடந்த பாலியல் சீண்டல்கள், நடிகர்கள் ;நடந்துக்கொண்ட விதம் போன்ற விஷயங்களை பாதி உண்மை, பாதி கற்பனை என்ற அடிப்படையில் இந்த தொடர் இருந்தது. அதாவது பல நடிகைகள் சார்ந்த விஷயங்களும் இதில் ஒரு நடிகையே சொல்லும் விஷயம் போல இடம்பெற்றது. இது தமிழ் சினிமாத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் ஒருமுறை நடிகர் சத்யராஜை குறிப்பிடுவது போல், இந்த தொடரில் அவர் சார்ந்த சாயலில் சில விஷயங்களும் எழுதப்பட்டது. இந்த தொடரில் நேரடியாக அந்த நடிகர் பெயரோ, புகைப்படமோ இடம்பெறாது. ஆனால், அவராக தான் இருக்கும் என தோன்றும் வகையில், அந்த தொடரில் பூடகமாக சில விஷயங்களை எழுதி, மறைமுகமாக சொல்லி விடுவர். நடிகையுடன் தொடர்பு என்ற வகையில் சத்யராஜை பற்றி தவறாக எழுதியதால், சத்யராஜ் குடும்பத்தினர் மனம் கலங்கி போயினர்.
அவரது மகள் திவ்யா, மகன் சிபிராஜ் படித்துக்கொண்டிருந்த நிலையில், இதை பற்றி அவர்களது நண்பர்கள், தோழிகள் விசாரிக்க, வீட்டுக்குள் அவமானமும், பீலிங்கும் என அவர்கள் நாட்களை கடத்தி இருக்கின்றனர். ஆனால், இதைப்பற்றி சத்யராஜ் கூறுகையில், நடிக்கறது என் வேலை, எழுதறது அவங்க வேலை. பத்திரிகை விக்கணுமுன்னு என் பேரை வெச்சு என்னமோ எழுதறாங்க என்று, ஜாலியாக சிரித்திருக்கிறார் சத்யராஜ்.