actor arjun

விரைவில் அந்த படம் 2ம் பாகமாக உருவாகும்… கதை ரெடியா இருக்குது… ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் சொன்ன ஆச்சரிய தகவல்!

By Elango on மாசி 15, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் அர்ஜூன். ஆக்சன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் இயக்குனர் தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் நடித்த படங்களில் ஏழுமலை படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படமாகும். இந்த படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகர் சிம்ரன் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, ஏழுமலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளது. விரைவில் அதுகுறித்து அப்டேட் வெளியாகும் என்று அர்ஜூன் கூறியிருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் வெளியான இந்த படத்தை டைரக்ட் செய்ததும் அர்ஜூன்தான். இந்த படம் 2ம் பாகமாக உருவாவது அர்ஜூன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.