“விஜய் கட்சியில் முதல் விக்கெட்?”…. அமைச்சர் ஆனந்திற்கு எதிராக கோர்ட் போன தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி…. சற்றுமுன் பரபரப்பு…!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அமைச்சர் N. ஆனந்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஞானசௌந்தரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மீது எவ்வித ஆதாரமுமின்றி பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியதோடு, கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு மாறாகச் செயல்பட்டு கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவெக தலைமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஞானசௌந்தரி தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது கட்சித் தலைமையின் இந்நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.