கோயில் நிலத்தை அபகரித்த வழக்கில் விடுவிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது .இதனால் மு.க அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
