![a 3 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/a-3-1.jpg)
CINEMA
எதிர்நீச்சல் சீரியலின் 2-வது பாகம் வருமா..? நம்ம ஜனனி சொன்ன பதில பாருங்க..!!
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால் ஒரு சில காரணங்களால் திடீரென சீரியல் முடிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து கடந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அவருக்கு பதிலாக நடிகர் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அது மட்டும் இல்லாமல் நடிகை கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் நான்கு மருமகள்களை சுற்றியே கதை நகர்ந்தது. ஆரம்ப காலகட்டத்தில் விறுவிறுப்பான போன எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு சரிவை சந்தித்தது.
ஆனாலும் எதிர்நீச்சல் சீரியலை மக்கள் விரும்பி பார்த்தனர். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் பார்ட் 2 வரலாம் என இணையத்தில் பேச்சு எழுந்தது. இதுகுறித்து நடிகை மதுமிதாவிடம் நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளித்த மதுமிதா எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் பற்றி எதுவும் இன்னும் உறுதியாகவில்லை என கூறினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.