Connect with us

சீரியலை முடித்த கையோடு.. மகளின் திருமணத்தையும் முடித்த எதிர்நீச்சல் திருச்செல்வம்.. வைரலாகும் வீடியோ..!

CINEMA

சீரியலை முடித்த கையோடு.. மகளின் திருமணத்தையும் முடித்த எதிர்நீச்சல் திருச்செல்வம்.. வைரலாகும் வீடியோ..!

எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் மகள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகப் பிரபலமான இயக்குனர் என்றால் அது திருச்செல்வம் தான். தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் முதலில் டப்பிங் திரையரங்கில் மற்றும் இளையராஜா மியூசிக் கம்போசிங் டப்பிங் ஒலிப்பதிவு கூடத்தில் பணியாற்றி வந்தவர். பிறகு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியிருக்கின்றார்.

   

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் பணியாற்றியிருக்கின்றார். அதன் பிறகு தான் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் எண்ணம் இவருக்கு தோன்றியது. முதன்முதலாக 2002 ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற சீரியலை இயக்க தொடங்கினார். அந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய பெரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.

 

அந்த தொடரின் மூலம் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அறிமுகமானார். பிறகு தேவயானி நடித்து மிகப்பெரிய ஹிட்டு கொடுத்த கோலங்கள் என்ற தொடரை இயக்கியதும் இவர்தான். அந்த சீரியலிலும் தொல்காப்பியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுக்க இந்த தொடருக்கு பல விருதுகளையும் வாங்கி இருந்தார்.

இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியிருக்கின்றார். தன்னுடைய சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கும் இவர் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஒரு சீரியலை உருவாக்கினார். அதுதான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல். இந்த சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்தது.

மேலும் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் இந்த சீரியல்களை ஆர்வமாக பார்த்து வந்தனர். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டம், பெண்களின் உரிமை, வீட்டில் இருக்கும் பெண்கள் படும் துன்பங்கள் மற்றும் அவமானங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த தொடரை எடுத்திருந்தார்.

 

இந்த சீரியலில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்து இறந்த பிறகு அப்படியே மாறிவிட்டது. இவருடைய கதாபாத்திரத்தில் வேலு ராமமூர்த்தி என்பவர் நடித்து வந்தார். இருப்பினும் இந்த சீரியல் போகப்போக ரசிகர்களிடையே திருப்தியை கொடுக்காத காரணத்தினால் இதனை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் திருச்செல்வம். அந்த வகையில் இந்த சீரியல் கடந்த எட்டாம் தேதி உடன் முடிவுக்கு வந்தது.

பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்தது ரசிகர்களிடையே சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளது. அதாவது திருச்செல்வம் அவர்களின் மகள் பிரியதர்ஷினிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top