நடிகை ரேஷ்மா முதலில் சின்னத்திரை தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றி அப்படியே வெள்ளித்திரையிலும் கால் பதித்து சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்தார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் ஒன்று விட்ட சகோதரி என்பதும் குறிப்பிடதக்கது. ரேஷ்மா சில வருடங்களுக்கு முன்பு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்கிற தமிழ் படத்தில் புஷ்பாவாக நடித்து பயங்கர பேமஸ் ஆனார்.
இதனால் அவரை பலரும் புஷ்பா எனறே அழைத்திட அவர் சில காலம் அமெரிக்காவிலேயே தங்கி காலத்தை கழித்தார். அந்த அடையாளத்தை மறைப்பதற்காகவோ என்னவோ முகத்தில் உதட்டிற்கு அறுவை சிகிச்சை செய்து ஆளே வித்தியாசமாக மாறிப் போனார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன்3 யில் வாய்ப்பு கிடைக்க அதிலும் சிறப்பாக பங்கு பெற்றார்.
இந்நிலையில் ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வருகிறார். இதில் இவரது நடிப்பு அபாரம் என்பதால் ஏராளமான சின்னத்திரை ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறார். ரேஷ்மா எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்க கூடியவர்.
View this post on Instagram