“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம் குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த தேர்தலில் தவெக கட்சியின் செல்வாக்கையும் தாக்கத்தையும் சரியாகக் கணிக்கத் தவறியதால்தான், இன்று அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தவெகவுக்கு எதிரான அரசியல் நகர்வுகளை இனி தீவிரப்படுத்த வேண்டும் என்று தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அரசியல் சவாலை எதிர்கொள்ள, மாவட்டந்தோறும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகச் சீரமைத்து வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சார்ந்த சாதனைகளையும் தற்போதைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து, அவர்களை பெருமளவில் கட்சியில் இணைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.