கரூர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். கரூர் துயர சம்பவம் குறித்த விவாதத்தின்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி, முதமைச்சர் இருக்கை அருகிலேயே தரையில் அமர்ந்து எடப்பாடி உள்ளிட்ட அதிமுக MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பாவுவை கண்டித்து எடப்பாடி உள்ளிட்டோர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
