தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள புதிய அரசுக்கும், பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக ஆட்சியமைக்க அவர் ரகசியமாகக் காய் நகர்த்தி வருவதாகவும், இது புதிய அரசியல் வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத் தரப்பிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வந்தன.
இந்தச் சூழலில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை வாழ்த்தி இபிஎஸ் பதிவிட்டுள்ள இந்த அறிவிப்பு, நிலவி வந்த அரசியல் சலசலப்புகளுக்கும் யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, தமிழக அரசியலில் நிலவி வந்த ஒருவிதப் பதற்றமான சூழலையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
