திடீர் திருப்பம்… மீண்டும் ஒன்றிணையும் அதிமுக… இபிஎஸ் எடுத்து அதிரடி முடிவு… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.

   

அதிமுகவில் இருந்து மேலும் பலரைத் தூக்க செங்கோட்டையன் மும்முரம் காட்டி வருகிறாராம். இந்நிலையில் இதனை அறிந்த எம்ஜிஆர் மாளிகை இனியும் ஆட்களை இழக்க வேண்டாம் என்று சமாதான பேச்சு வார்த்தைகள் இரண்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வேலுமணியும், முனுசாமி, கே சி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் என பலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. வெள்ளைக்கொடி பறந்தால் ஓபிஎஸ் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.