“நேரு முதல் செந்தில் பாலாஜி வரை”… எடப்பாடியின் டெல்லி ப்ளான்… அதிரப்போகும் தமிழக அரசியல்….!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

தமிழக அரசியலில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வரவும், தேர்தல் வியூகங்களை வகுக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, திமுகவிற்குச் சாதகமாகச் செயல்படும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கி அவர்கள் மீது நடவடிக்கை கோரவுள்ளதாகவும், குறிப்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுங்கட்சியின் செல்வாக்கை முடக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்கும் இந்த அதிரடி நகர்வுகள், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசியலில் பெரும் திருப்பங்களையும் அதிரடி மாற்றங்களையும் உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.