தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

By Soundarya on வைகாசி 28, 2026

Spread the love

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய அந்த மூதாட்டி மீட்கப்பட்டு, தற்போது சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மற்றும் மரக்காணம் பகுதிகளில் சிறுமிகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களின் வடுக்கள் ஆறுவதற்குள், தமிழகத்தில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மேலும் 3 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.