பயங்கர ஷாக்..! கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு முன்… குற்றவாளிகள் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love
சமீபகாலமாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தற்போது கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை தூக்கிச் சென்று 3 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஏர்போர்ட் பின்புறம் உள்ள சாலையில், கல்லூரி மாணவியின் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்தார்கள்.
இந்த சம்பவத்தில் சதீஷ், கார்த்திக் ஆகியோர் சகோதரர்கள், குணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த சம்பவத்தில்  வன்கொடுமை செய்த சம்பவத்தில் பிடிபட்ட மூவர் கும்பல் குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த கும்பல், வன்கொடுமையில் ஈடுபடுவதற்கு முன்னர் முதியவர் ஒருவரை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. திருடப்பட்ட பைக்கில் மது அருந்த சென்றபோது ஏற்பட்ட தகராறில் முதியவர் ஒருவரை கொலை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.