அய்யோ… ரியல் ஹீரோ சார்… யாசகம் பெற்ற ரூ10,000 -ஐ முதல்வர் நிதிக்குக் கொடுத்த முதியவர்… இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 19, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற முதியவர், தான் யாசகம் எடுத்துச் சேர்த்த ரூ.10,000 பணத்தைக் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் நேரில் சென்று, பொதுமக்களின் நல்வாழ்வுக்காகவும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும் இவர் தொடர்ந்து இவ்வாறு நிதியுதவி செய்து வருகிறார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில், உணவிற்காக மட்டும் பிறரிடம் உதவி பெறும் இவர், தன்னிடம் சேரும் மீதிப் பணத்தை முழுக்க முழுக்க சமூக சேவைக்காகவே அர்ப்பணித்துள்ளார். பள்ளி பருவத்தில் தனக்குக் கிடைக்காத தரமான கல்வி மற்ற ஏழை குழந்தைகளுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுப் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தர உறுதுணையாக இருந்துள்ளார்.

   

கொரோனா பேரிடர் காலத்தில் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவத் தொடங்கிய இவர், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் செய்து ஆட்சியர்களைச் சந்தித்து நிவாரண நிதியை வழங்கி வருகிறார். வறுமையிலும் இவரது இந்த தாராள குணமும், சமூக நலன் சார்ந்த சிந்தனையும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.