சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்ய நாளை (ஆகஸ்ட் 31) கடைசி நாள் என்பதால், வாடிக்கையாளர்கள் உடனடியாக இதனை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு உங்கள் எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியைப் (App) பதிவிறக்கம் செய்து லாகின் செய்த பிறகு, அதில் உள்ள ‘eKYC’ எனும் தேர்வைக் கிளிக் செய்து, முக அங்கீகாரம் (Face Recognition) மூலமாகவே வீட்டிலிருந்தபடியே மிக எளிதாகச் சரிபார்ப்பை நிறைவு செய்ய முடியும். குறித்த காலக்கெடுவுக்குள் e-KYC செய்யத் தவறினால் எரிவாயு இணைப்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்படவோ அல்லது மானியம் ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இந்த முக்கியமான தகவலை உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
