“மேக்கப் கலைஞரால் தப்பித்தேன்”.. தொடர்ந்து இருமுறை டார்ச்சர்.. நடிகை ஈஷா குப்தா பரபரப்பு புகார்..!!

By admin on ஐப்பசி 2, 2023

Spread the love

தமிழில் “யார் இவன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபல ஹிந்தி நடிகை ஈஷா குப்தா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, சினிமாவில் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் இரண்டு முறை பாலியல் தொந்தரவை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார்.

   

ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். பாதி படம் முடிந்த பிறகு மீண்டும் தொந்தரவு அளித்தார். படத்தில் இருந்து நீக்கப்படுவேன் என்று இணை தயாரிப்பாளர் கூறியும் நான் மறுப்பு தெரிவித்தேன். மேலும் சில திரைப்படங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. என்னை பற்றி பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டதால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

   

 

மற்றொரு படத்தில் வெளியூர் படப்பிடிப்பின் போது நான் அவர்களது வலையில் விழுந்து விடுவேன் என நினைத்தார்கள். எனக்கு அவர்களின் நோக்கம் புரிந்ததால் என் மேக்கப் கலைஞரை நான் எனது அறையிலேயே தங்க வைத்துக் கொண்டேன் என கூறியுள்ளார்.