அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவை சபாநாயகராகப் பணியாற்றிய பி. தனபால், வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சியிலிருந்து விலகப் போவதாகவும் கடந்த சில நாட்களாகப் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்தச் சூழலில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “என்னைப் பொறுத்தவரை ஆதியும் அந்தமும் அதிமுக தான்” எனத் தனது விசுவாசத்தைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது குறித்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும், கட்சி மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டு என்றும் அதிமுகவின் உண்மையான தொண்டனாகத் தொடர்வேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் உருக்கமாக விளக்கியுள்ளார்.
