தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரு காலத்தில் தனது நெருங்கிய நண்பராக இருந்த செங்கோட்டையன், அமைச்சர் பதவிக்காகத் தன்னிடம் கண்ணீர் வடித்தார் என்றும், அவர் மிகவும் பொறாமை குணம் கொண்டவர் என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்துகொண்டே திமுகவின் உளவாளியாகச் செயல்பட்டார் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் பழனிசாமி குற்றம்சாட்டினார். மாணவர்களுக்குக் கருணாநிதி படம் போட்ட சைக்கிள்களைக் கொடுத்தவர் அவர்தான் என்று குறிப்பிட்ட இபிஎஸ், அதிமுகவை உடைக்கத் திமுகவுடன் அவர் கைகோர்த்ததாகவும், ஒரு கல்லூரியைக் கட்ட அவருக்கு எப்படி நிதி வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கோட்டையன் வயதுக்கு ஏற்றார் போலப் பேச வேண்டும் என்று எச்சரித்த எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது பணத்தை ஆற்றில் விட்டவர் அவர்தான் என்று கூறினார். தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டால் செங்கோட்டையன் வீதியில் கூட நடக்க முடியாது என்றும், தேவைப்பட்டால் அந்த ஆதாரங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தயார் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…