போடு செம..! தங்கம் வென்ற கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு ரூ.1 லட்சம் வழங்கிய எடப்பாடி…!!

By Soundarya on ஐப்பசி 29, 2025

Spread the love

பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழகத்திலிருந்து சென்னை கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை ஆர்.கார்த்திகா துணை கேப்டனாக  பங்கு பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றார் . இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்திற்கு கார்த்திகாவை அழைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பூங்கொத்து மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி  வாழ்த்து தெரிவித்தார்.