இங்கே நாடு பற்றி எரியுது… ஆனா துணை முதல்வர் உல்லாச பயணம் போயிட்டார்… திமுகவை விமர்சித்த EPS..!!

By Soundarya on ஐப்பசி 3, 2025

Spread the love

தர்மபுரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கரூரில் துயர சம்பவம் ஒன்று நடந்துவிட்டது. முதல்வர் இரவோடு இரவாக வந்து ஆறுதல் சொன்னார் சரி. ஆனால் துணை முதல்வர் உல்லாசமாக வெளிநாடு போய்விட்டார். இங்கே நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே தனி விமானம் பிடித்து வருகிறா.ர் பார்த்தார் மீண்டும் விமானம் ஏறிப் போய்விட்டார். இவரெல்லாம் ஆண்டால் நாடு உருப்படுமா? மக்கள் உயிரிழந்து துடிக்கும் நேரத்தில் கூட இவர்களுக்கு இரக்கமில்லை. உல்லாச சுற்றுப்பயணம் தான் முக்கியம்” என்று பேசி உள்ளார்.