சமீப காலமாகவே தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே போகிக் கொண்டிருக்கிறது. பின்வரும் காலத்திலும் நவீன் விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கும். அதனால் 9k தங்கம் அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது அனைத்து மக்களிடமும் தங்கம் என்பது முக்கியமான பொருளாக மாறிவிட்டது. தங்கத்தை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், தங்கத்தை விரும்பும் நாடில் இந்தியாவே முதலிடம். அலங்கார பொருளாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் பெண்கள் அதிகமாக தங்க ஆபரணங்களை உபயோகிக்கின்றனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை உயர்வு காரணத்தினால் சேமிப்புக்காக அனைவரும் தங்க நாணயத்தை வாங்குகிறார்கள்.
தங்க விலை உயர்வின் காரணத்தினால் இந்தியாவில் 60 சதவீதம் தங்கத்தின் விற்பனை குறைந்துள்ளது. விலை உயர்வினால், 24 கேரட்டில் இருந்து 18 கேரட் மற்றும் 14 கேரட் நகைகளை அதிகமாக வாங்குகிறார்கள். மத்திய அரசு தற்போது ஒன்பது கேரட் தங்கத்தை தர நிர்ணய அமைப்பின் (BIS) ஆள்மார்க்கில் சேர்த்துள்ளது. நகைகளின் ஹால்மார்க் முத்திரை 24 KF, 24 KS, 23 K, 22K, 20K, 18 K, 14 K உடன் தற்போது 9K சேர்க்கப்பட்டுள்ளது.
24 கேரட் தங்கத்தில் 99.9 தூய்மையான சுத்தமான தங்கமாகும். 9 கேரட் தங்கத்தில் 37.5% மட்டுமே தூய்மையான தங்கம், மீதமுள்ள 62.5% செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற உலோகங்களை கலந்துள்ளனர். 1000 கிலோகிராமில் 375 மட்டுமே சுத்தமான தங்கம் ஆகும். 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 10.053 ஒரு சவரன் ரூ. 80,424 க்கும் விற்பனையாகிறது. அதுவே 9 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 3700 க்கும் ஒரு சவரன் ரூ. 29,600க்கும் விற்பனையாகிறது.
