சமீபத்தில் திருப்பூர் இளம் பெண் ரிதன்யா தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் மறைவதற்குள் அடுத்ததாக பிரபல youtube மீது வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. மொபைல், டிவி மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருள்களின் தரத்தை பற்றி வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு வருபவர்தான் சுதர்சன். யுவர் youtube இல் பதிவு செய்யும் வீடியோக்கள் சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து செல்லும். அப்படி youtubeல் பிரபலமாக இருக்கும் சுதர்சன் மற்றும் அவர் பெற்றோர் மீது தேனி மகளிர் போலீசில் வரதட்சனை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்ய போலீசார் களமிறங்கியுள்ளனர். சுதர்ஷன் மீது அவர் மனைவி கொடுத்துள்ள புகாரில் பாதிக்கப்பட்ட விமலா தேவி என்பவர் எம்பிபிஎஸ் படித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தபோது சுதர்சன் என்பவர் அறிமுகமாகி இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது விமலாதேவியின் பெற்றோர் 30 பவுன் தங்க நகையும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்பான சீர்வரிசை பொருள்களை கொடுத்துள்ளனர்.
அப்போது வீடு சொந்தமாக கட்டும்போது விமலாதேவி இடம் 30 பவுன் நகையை பெற்றுக்கொண்டு வீடு கட்டி புது வீட்டிற்கு குடி போனதாகவும் பிறகு வீட்டுக் கடனை அடைக்க முடியவில்லை என சீர்வரிசை பொருள்கள் போதாது என்று டாக்டருக்கு படிச்சு என்ன சம்பாதிச்சு கொடுக்கிறாய், ஒன்னும் பத்தலை என்றும் மேலும் இருவது பவுன் நகை கொடுத்தால்தான் பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்வோம் என்றும் கூறி விமலாதேவியை சுதர்சனின் பெற்றோர் அசிங்கமாக பேசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்பினரும் பேச்சுவார்த்தையின் போது விமலா தேவி மற்றும் குழந்தையையும் அழைத்து செல்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்தபோது சுதர்சன் மற்றும் அனைவரும் ஒன்று சேர்ந்து 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டு 30 பவுன் நகையை விற்று மேலும் 20 பவுன் நகையை கொண்டு வந்தால் வாழ முடியும் என்று அதிகமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் விமலா தேவி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுதர்ஷன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…