“சாப்பிடும்போது இந்தத் தப்பை பண்றீங்களா?”… அப்போ உங்களுக்கு தொப்பை குறையாது…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…..!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

இன்றைய அவசர உலகில் இளம் வயதினர் பலரையும் கவலையடையச் செய்யும் ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினை தொப்பை. முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களே இதற்கு முதன்மைக் காரணமாக அமைகின்றன. நாம் உண்ணும் உணவு உமிழ்நீருடன் சேர்ந்து நன்கு அரைக்கப்பட்டு வயிற்றுக்குள் செல்லும் போதுதான் செரிமானம் முழுமையடைகிறது. ஆனால், சாப்பிடும் முறையில் நாம் செய்யும் சில தவறுகள் தேவையற்ற கொழுப்பை அடிவயிற்றில் சேரச் செய்கின்றன.

குறிப்பாக, உணவு உண்ணும் போதோ அல்லது சாப்பிட்டு முடித்த உடனேயே அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இவ்வாறு செய்வதால், உணவைச் செரிப்பதற்காக வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மற்றும் செரிமானத் திரவங்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிமானத் திறன் குறைந்து, உண்ட உணவு சரியாகச் செரிக்காமல் தொப்பை விழ வழிவகுக்கிறது. எனவே, சாப்பிடும் போது அதிகத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பது அவசியம்.

   

சாப்பிட்ட பிறகு குளிர்ந்த பானங்கள் (Cool Drinks) அருந்துவது தொப்பை வளர்வதை இன்னும் விரைவுபடுத்தும். இது செரிமான மண்டலத்தின் வெப்பநிலையைக் குறைத்து கொழுப்பைத் தேக்கி வைக்கிறது. அதேபோல், பசி எடுத்தும் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதும் ஆபத்தானது. பசி நேரத்தில் சுரக்கும் செரிமான அமிலங்கள் வயிற்றில் உணவு இல்லாத போது குடல் சுவர்களைப் பாதித்து நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்ற நோய்களுக்குக் காரணமாகின்றன.

   

ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற விரும்புவோர் உணவைச் சரியான நேரத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்குச் சற்று முன்பும், சாப்பிட்டு முடித்த பின் சிறிதளவும் தண்ணீர் குடிப்பது நல்லது. குளிர்பானங்களைத் தவிர்த்து, உணவு நன்கு செரிக்க வாய்ப்பளிப்பதன் மூலம் தொப்பை வராமல் தடுத்து உடலைத் தேக ஆரோக்கியத்துடன் பராமரிக்கலாம்.