ஜி ஜின்பிங் கொடுத்த கிஃப்ட்.. ஏர்போர்ட்டில் நடந்த ட்விஸ்ட்…. சீனாவுக்கு டிரம்ப் கொடுத்த மரண அடி…. உலகமே அதிர்ச்சி…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் உறவை மேம்படுத்துவது குறித்துப் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. டிரம்ப் எதிர்பார்த்தபடி அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கைகூடவில்லை என்றாலும், சோயாபீன்ஸ் மற்றும் போயிங் விமானங்கள் சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தச் சுற்றுப்பயணத்தின் முடிவில், டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற அமெரிக்கப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் குழுவுக்குச் சீனா சார்பில் ஏராளமான பரிசுப் பொருட்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

   

இருப்பினும், இந்தப் பயணத்தின் முடிவில் ஒட்டுமொத்த உலகையும் உற்றுநோக்க வைக்கும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியது. அமெரிக்கக் குழுவினர் தாயகம் திரும்புவதற்காகச் சீன விமான நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குப்பைத் தொட்டியில் சீனா வழங்கிய அனைத்துப் பரிசுப் பொருட்கள், பர்னர் போன்கள் (Burner phones), அழைப்பிதழ்கள் மற்றும் அடையாள பேட்ஜ்கள் அனைத்தையும் மொத்தமாக வீசிவிட்டுச் சென்றனர். பொதுவாகத் திரைமறைவில் ரகசியமாக நடக்கும் இந்த வழக்கம், இந்த முறை வெளிப்படையாக நடந்ததோடு அதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

   

வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் உலக அரங்கில் சித்தாந்த ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் எதிரெதிர் துருவங்களாகக் கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலமாக உளவு பார்ப்பது மற்றும் ரகசியக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சீனா தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனா தங்களுக்குக் கொடுக்கும் பரிசுகள் அல்லது மின்னணு சாதனங்கள் வழியாகத் தங்களின் நடமாட்டங்களையும், அரசு சார்ந்த ரகசிய உரையாடல்களையும் உளவு பார்க்கக்கூடும் என்ற பலத்த சந்தேகம் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினருக்கு எப்போதும் உண்டு.

 

இந்தக் கடுமையான பாதுகாப்பு அச்சத்தின் காரணமாகவே, வெள்ளை மாளிகை பாதுகாப்புப் பிரிவு மற்றும் அமெரிக்கச் சீக்ரெட் சர்வீஸ் (Secret Service) அதிகாரிகளின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி இப்பொருட்கள் அனைத்தும் குப்பையில் வீசப்பட்டன. இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் நிருபர் எமிலி குடின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “சீன அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டைகள், போன்கள், பின்கள் அனைத்தையும் அமெரிக்க ஊழியர்கள் சேகரித்துக் குப்பையில் வீசினர்; சீனாவில் இருந்து எதையும் கொண்டு வர அவர்களுக்கு அனுமதி இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு புதிய நடவடிக்கை அல்ல என்றாலும், இரு நாடுகளுக்கு இடையேயான பனிப்போரின் தீவிரத்தை வெளிப்படையாகக் காட்டும் ஒரு சம்பவமாக இது மாறியுள்ளது.