‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் நடித்த இந்த குறும்புக்கார குழந்தை நட்சத்திரத்தை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? 

By Begam

Published on:

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1996ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘அவ்வை சண்முகி’. இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக மீனா, ஜெமினி கணேசன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இப்பொழுது ஒளிபரப்பு செய்தால் கூட அதை பார்க்க பல ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கின்றனர்.

 

   

அந்த அளவுக்கு இந்த படம் மிகப் பிரபலம். இப்படத்தின் பாடல்களும் மிகப் பிரபலம் தான். நடிகர் கமலஹாசன் இரட்டை வேடத்தில் அசத்தியிருப்பார். இத்திரைப்படத்தில் நடிகை மீனா கமலை பிரிந்து அப்பா வீட்டில் வந்து தங்கி இருப்பார். அப்பொழுது அவரை சமாதானப்படுத்த அவர்களின் வீட்டுக்கு அவ்வை சண்முகியாக செல்வார் நடிகர் கமலஹாசன்.

இத்திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் மீனாவுக்கு மகளாக ஆன் ஆன்ரா என்ற குழந்தை நடித்திருக்கும். இந்நிலையில் இக்குழந்தையின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தை தற்பொழுது வளர்ந்து இளம் மங்கையாக மாறிவிட்டார்.

திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது இந்த குழந்தை மளமளவென்று வளர்ந்து அழகு கன்னியாக ஜொலிக்கிறது. இவரைப் பற்றிய தகவல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆன் ஆன்ரா சென்னையில் நிறுவனம் ஒன்றே நடத்தி வருவதாகவும், ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதோடு மட்டுமின்றி 33 வயதான ஆன் அன்ரா சினிமாவில் ஆர்வம் செலுத்தவில்லை என்றாலும் மாடலிங் துறையில் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு பதில் இவர் நடிக்க வேண்டியது என்றும் வெற்றிமாறன் சார் கேட்டும் முடியாதுன்னு சொல்லி பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணியதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார். தற்பொழுது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.