CINEMA
நடிகர் சூர்யாவுடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் தெரியுமா…? அவருக்கும் சூர்யாவுக்கும் இப்படி ஒரு தொடர்பா..?
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாவது பாகமும் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தை முடித்தபிறகு சுதா கொங்கரா உடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படம் ஆகியவற்றில் சூர்யா நடிக்க இருக்கிறார். தற்பொழுது நடிகர் சூர்யா மும்பையில் செட்டில் ஆகி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிள்ளைகளின் படிப்பு, மற்றும் தங்களின் தொழில் ரீதியான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, மும்பையில் குடியேற ஜோதிகா விருப்பப்பட்டதால், சூர்யா பல கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி அங்கு குடியேறினார்.
இவர்களின் பிள்ளைகளான, தியா மற்றும் தேவ் இருவருமே, திருபாய் அம்பானி பள்ளியில் தான் தற்போது தங்களுடைய படிப்பை தொடர்ந்து வருகிறார்கள். இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் சூர்யா. தற்போது அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியரை பல வருடங்கள் கழித்து சந்தித்து இருக்கிறார். 1995 வருட பேட்ச் Commerce Department HOD ஆக இருந்த ராபர்ட் என்பவரை தான் சூர்யா சந்தித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை சூர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு ….
View this post on Instagram