விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றார். இந்த இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.

தற்பொழுது kpy பாலா மருத்துவமனையில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் பாவலட்சுமனனை பார்க்க சென்றுள்ளார். மேலும் அவருக்கு 30,000 கொடுத்து உதவியும் செய்துள்ளார். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று நான் சின்ன வயதிலிருந்து ரசித்த நகைச்சுவை நடிகர் அன்பு அண்ணன் பாவா லட்சுமணன் சந்தித்து, நலம் விசாரித்து என்னால் முடிந்த 30,000 ஆயிரம் கொடுத்தேன்.

கூடிய விரைவில் அன்பு அண்ணன் பூரண குணமடைந்து திரைப்படங்களில் நடிப்பதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது kpy பாலாவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…
https://www.instagram.com/reel/CtmKVQZLopn/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
