உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்காங்களா?.. அப்போ போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டத்தில் உடனே ஜாயின் பண்ணுங்க… குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…!

By Srimathi on புரட்டாதி 2, 2025

Spread the love

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, பெற்றோர்கள் மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான நிதி திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள், போஸ்ட் ஆபீஸில் “செல்வமகள் சேமிப்பு திட்டம்” அல்லது “பொது வருங்கால வைப்பு நிதி” போன்ற திட்டங்களையே தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும் சான்றளிக்கப்பட்ட நிதி திட்டமிடுபவர் விஜய் மகேஸ்வரி, LinkedIn இல் பகிர்ந்து கொண்ட கணக்கிடுதல் படி, முறையான முதலீடு திட்டங்கள் (SIP) போன்ற சந்தை இணைக்கப்பட்ட முதலீடுகள் நீண்ட காலத்திற்கு இன்னும் அதிகமான பணத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

அவர்களின் பகுப்பாய்வின்படி, நீங்கள் 21 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்தால், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்  ரூ. 71.8 லட்சம் கிடைக்கும். அதுவே பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (PPF) ரூ. 72.9 லட்சம் கிடைக்கும். மேலும் SIPயில்  ரூ. 1.37 கோடி கிடைக்கும். இதன் பொருள் SIPகள் இரு மடங்கு வருமானத்தை அளிக்கிறது என்று கூறுகின்றனர்.

   

பாதுகாப்புத் திட்டங்கள் vs சந்தை அடிப்படையிலான திட்டங்கள்

   

செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், இவ்விரண்டுமே பாதுகாப்பை வழங்குகின்றன. ஆனால் அவற்றின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். மேலும் SIP கூட்டு செயற்கை மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட வருமானத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலதனத்தை மிக வேகமாக வளர அனுமதிப்பதுடன், சிறிய முதலீடுகளுக்கும் பொருந்தும். அதே கணக்கீடுகளின் படி, நீங்கள் 21 ஆண்டுகள் ஆண்டுதோறும் ரூ. 5000 முதலீடு செய்தால், SSY திட்டத்தில் ரூ. 2.39 லட்சம் பெறலாம். மேலும் , PPF திட்டத்தில்  ரூ. 2.43 லட்சமும், SIP திட்டத்தில் ரூ. 4.58 லட்சம் பெறலாம்.

 

பாதுகாப்பு மற்றும் உத்தரவாத வருமானத்தை விரும்புவோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தையும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தையும் தேர்வு செய்யலாம். ஆனால் குழந்தைகளின் உயர்கல்வி திருமணம் போன்றவற்றுக்கு பண சேர்க்க விரும்புவோர், SIP திட்டம் மிகவும் நன்மையாக அமையும்.