கொங்கு மண்டலத்தில் தங்களுடைய கட்சியை பலப்படுத்துவதில் திமுக அதிதீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், டிச.29-ஆம் தேதி திருப்பூர் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு’ நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். கடந்த வாரம் வட தமிழகத்தை குறி வைத்து இளைஞர் அணி மாநாட்டை திமுக நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
