BREAKING: தேர்தலில் தோல்வி… திமுக வட்டச் செயலாளர் தற்கொலை…!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த திமுக வட்டச் செயலாளர் ஏசுதாஸ், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயரச் செய்தி வெளியாகி அவரது குடும்பத்தினரையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கட்சியின் தீவிர விசுவாசியான ஏசுதாஸின் இந்த திடீர் முடிவு, திமுக தலைமை மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அசம்பாவிதம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தேர்தல் தோல்வி மட்டும்தான் தற்கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.