கோவையில் தேமுதிகவின் கூட்டத்திற்கு திமுகவினர் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக பிரேமலதா கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இப்போ நான் இங்கே வந்து அமர்ந்ததிலிருந்து கழக நிர்வாகிகள் எல்லாம் என் காதில் சொல்வது, எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினாங்க என்று கூறுகின்றனர். நான் இன்று தமிழ்நாடு முழுவதும் போய் வந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கே தெரியும் தென் மாவட்டத்தை எல்லாம் முடிச்சு மதுரையிலிருந்து இன்னைக்கு கோவைக்கு வந்துள்ளேன். அங்கெல்லாம் காவல்துறையினரும் சரி பொதுமக்களும் சரி கட்சிக்கு உற்ற நண்பர்களாக இருந்தனர். பக்க பலமாக இருக்கின்றனர்.
ஆனால் கோவையில் மட்டும் என்ன வித்தியாசம்? யாருக்காவது வித்தியாசம் தெரிகிறதா? நான் கண்டுபிடித்து விட்டேன். உள்ளே வரும்போது நீங்கள் என் காதில் சொல்லும் போதே நான் கண்டுபிடித்து விட்டேன். கொங்கு மண்டலத்தில் யார் இன்று பொறுப்பாளர்? தமிழ்நாடு முழுக்க போய் வந்து விட்டேன். ஏன் கோவையில் மட்டும் இந்த அராஜகம், தேமுதிகவை பார்த்து உங்களுக்கு பயமா, நீங்கள் எங்கள் பேனரை எடுத்துவிட்டு கொடியை எடுத்துவிட்டு தொல்லை கொடுத்தீர்கள்? அப்படி செய்தால் இந்த மீட்டிங் நடக்காதா? சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? அந்த அளவிற்கு பயப்படுகின்ற கூட்டம். இதை யார் செய்தார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. பத்திரிக்கையாளர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் உங்கள் வேலையெல்லாம் தேமுதிக விடம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பிரேமலதா கோபமாக பேசியுள்ளார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…