“அங்க கை வச்சா சும்மா இருக்க மாட்டேன்”…. ஸ்டாலின் எதிரிலேயே சீறிய துரைமுருகன்… அறிவாலயத்தில் பதற்றம்… திமுகவில் உச்சக்கட்ட அதிகார மோதல்…..!

Spread the love

தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் திமுக அறிவாலயத்தில் உட்கட்சி அரசியல் மிக தீவிரமடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் மற்றும் பின்னடைவுகள் குறித்து ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் அமைத்த குழுவினர், தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர். குறிப்பாக, ‘இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்’ மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், உடனடியாக எந்தவொரு பெரிய மாற்றத்தையும் தலைமை மேற்கொள்ளாதது கட்சியினரிடையே நீண்ட நாட்களாகவே நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது.

இந்தச் சூழலில் ஸ்டாலின் தனது இல்லத்தில் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். துரைமுருகன், டி.ஆர். பாலு, கே.என். நேரு, ஆ. ராசா, பொன்முடி, கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட 16 மூத்த தலைவர்கள் மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மா.செ. பதவி இல்லை என்றும், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என்ற மாற்றத்தை நிறைவேற்றுவதில் தான் உறுதியாக இருப்பதாக ஸ்டாலின் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆலோசனையின் போது, வேலூர் மாவட்ட மறுசீரமைப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ஸ்டாலினுக்கும் மூத்த தலைவர் துரைமுருகனுக்கும் இடையே காரசாரமான வார்த்தை மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த துரைமுருகன் கூட்டத்திலிருந்து வெளியேற முயல, மற்ற தலைவர்கள் தலையிட்டு அவரைச் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். பின்னர் கனிமொழி உள்ளிட்டோர் பேச்சைத் தொடர, கூட்டம் சகஜ நிலைக்குத் திரும்பிய போதிலும், இந்தச் சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த மோதல் சம்பவம், திமுகவின் மூத்த தலைவர்களுக்கும் இளைய தலைமுறைக்கான சீர்திருத்த விருப்பங்களுக்கும் இடையே நிலவும் அதிகாரப் போட்டியையே வெளிக்காட்டுகிறது. கட்சியை வலுப்படுத்த இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து 70 வயதானவர்களுக்கு ஓய்வு அளிக்க தலைமை விரும்பினாலும், தங்கள் பகுதியில் செல்வாக்கு சரிந்துவிடும் என்ற அச்சத்தில் மூத்த தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாரம்பரியமாக இருக்கும் மூத்த தலைவர்களைப் பகைத்துக் கொள்ளாமல், அதேவேளையில் தேவையான மாற்றங்களையும் எவ்வாறு ஸ்டாலின் கொண்டு வரப்போகிறார் என்பதில் தான் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு அடங்கியுள்ளது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

25 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

27 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

33 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

42 minutes ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

1 மணத்தியாலம் ago