ஸ்டாலினை தடுத்த ‘அதிமுக’ பயம்… அதிரடி ஆக்ஷனை திடீரென கைவிட்டது ஏன்?…. திமுகவில் கசிந்த ரகசியம்… பின்னணியில் இருக்கும் பேரதிர்ச்சி….!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதே இந்த விலகல்களுக்கு முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மறுபக்கம், ஆளுங்கட்சியான திமுக இதுபோன்ற பெரிய அளவிலான கட்சித் தாவல்களைச் சந்திக்கவில்லை என்றாலும், சரியாகச் செயல்படாத மாவட்டச் செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தற்போதையச் சூழலில் அதிரடி நடவடிக்கை எடுத்தால் அதிமுகவைப் போலவே தங்களுக்குள்ளும் உட்கட்சிப் பூசலும், கட்சித் தாவல்களும் வெடித்துப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி, கட்சியின் ஸ்திரத்தன்மையைக் காக்கும் நோக்கில் அவர் தனது முடிவைக் தற்காலிகமாகக் கைவிட்டு அமைதி காப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.