தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து உதயநிதி கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு நாடகமாடுவதாகவும், அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை வரை சென்றுள்ளதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் திரைக்கதை இருப்பதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள 3 முக்கியக் காட்சிகளை விவரித்துள்ள அப்துல்லா, முதற்கட்டமாகச் சம்பந்தப்பட்ட நடிகை ஊடகங்கள் முன் தோன்றித் தனது மானத்தைக் காத்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, வரும் இடைத்தேர்தலில் அந்த நடிகை தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற வைக்கப்படுவார் என்றும், இறுதியாக அவர் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவராகவும் முக்கியத் தலைவியாகவும் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் அவர் கணித்துக் கூறியுள்ளார்.
நடிகையைத் தன் கட்சியில் சேர்த்து முன்னிலைப்படுத்த இத்தனை டிராமா எதற்கு என்றும், உதயநிதி மீது வீண் பழி போடுவது ஏன் என்றும் அப்துல்லா காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த விவகாரமான பதிவு தவெக நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், உதயநிதியின் கைது நடவடிக்கையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே திமுகவினர் இதுபோன்ற கற்பனைக் கதைகளைப் பரப்புவதாக விஜய் ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
