தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் 2538 பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கப்பட்டுள்ளதாக ED கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே என் நேரு மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ED கடிதம் எழுதியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைக்காக லஞ்சம் பெற்றதாக இருந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றார். அதே பாணியில் தற்போது நேரு கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த சம்பவம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
