“இங்கையே 100 பேரை நான் இறக்கவா?”… நேரலையிலேயே சவால் விட்ட திமுக பேச்சாளர்… தமிழக அரசியல் பரபரப்பை கிளப்பும் வீடியோ…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது திமுக பேச்சாளர் செந்தில்வேல் அடியாட்களுடன் சேர்ந்து பாஜகவினரை மிரட்டிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது, பாஜகவினர் தன்னை கேலி செய்ததாகக் கூறி பாதியிலேயே வெளியேறிய செந்தில்வேல், பின்னர் வெளியே 50-க்கும் மேற்பட்ட குண்டர்களைத் திரட்டி வந்து வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “திராவிட இயக்கத்தினர் பேசும்போது இடையூறு செய்யக்கூடாது என்ற பாடத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம்” என்று அவர் மிரட்டும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், விவாதம் முடிந்து வெளியே வந்த பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திமுக கூலிப்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் முன்னிலையிலேயே மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சக்கட்டம் என்றும் எஸ்.ஜி.சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுக்கும் திமுகவின் இந்த ஜனநாயக விரோதப் போக்கு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.